sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெரும்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 36 வயது நபர் வெட்டிக்கொலை

/

பெரும்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 36 வயது நபர் வெட்டிக்கொலை

பெரும்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 36 வயது நபர் வெட்டிக்கொலை

பெரும்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் 36 வயது நபர் வெட்டிக்கொலை


ADDED : ஜூலை 20, 2025 12:47 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம்:சமையல் 'காஸ்' சிலிண்டர் டெலிவரி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில், ௩௬ வயது மதிக்கத்தக்க நபர் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

நேற்று காலை 6:00 மணியளவில், நடைபயிற்சி சென்றவர், பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவரின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., மொபெட்டை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தெரிய வந்ததாவது:

பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி, 36. இவர், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள 'காஸ்' ஏஜன்சியில் சிலிண்டர் டெலிவரி ஊழியராக பணி செய்து வந்துள்ளார்.

இவருக்கு மனைவி வீரலட்சுமி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில வாரங்களுக்கு முன் 'கணவருடன் வாழ விருப்பமில்லை' என, கண்ணகிநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வீரலட்சுமி புகார் கொடுத்து உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பழனிசாமி வீரலட்சுமியை முகத்தில் தாக்கியதில், அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, பழனிசாமி மது போதையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவு 1:30 மணிக்கு, தன் வாகனத்தில், வீட்டை விட்டு வெளியில் சென்ற பழனிசாமி, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

போலீசார் அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us