/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
40 யூனிட் ரத்ததானம் கூட்டுறவு துறையினர் வழங்கல்
/
40 யூனிட் ரத்ததானம் கூட்டுறவு துறையினர் வழங்கல்
ADDED : நவ 19, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது.
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்த ரத்ததான முகாமிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ரம்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
பெரிய காஞ்சிபுரம், சின்னகாஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள், 40 யூனிட் ரத்தம் வழங்கினர். அவர்களுக்கு, பழங்கள், சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

