sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 தொழிலாளர்களுக்கு சிகிச்சை

/

பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 தொழிலாளர்களுக்கு சிகிச்சை

பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 தொழிலாளர்களுக்கு சிகிச்சை

பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 40 தொழிலாளர்களுக்கு சிகிச்சை


ADDED : ஜூலை 30, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், 'ஜெடெக்ட் இந்தியா' என்ற கார் ஸ்டீரிங் வீல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட, 40 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கத்தில், 'ஜெடெக்ட் இந்தியா' என்ற கார் ஸ்டீரிங் வீல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மதியம், தொழிற்சாலை கேன்டீனில் தொழிலாளர்கள் 40 பேர் உணவு சாப்பிட்டனர். அப்போது, உணவில் பல்லி இருந்தது தெரிந்தது.

இதையடுத்து, தொழிலாளர்கள், உடனடியாக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

தொழிலாளர்களுக்கு பாதிப்பு எதும் இல்லாததை அடுத்து, மீண்டும் அவர்கள் தொழிற்சாலைக்கு சென்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us