sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓராண்டில் 45 பேர் 'குண்டாசில்' கைது

/

ஓராண்டில் 45 பேர் 'குண்டாசில்' கைது

ஓராண்டில் 45 பேர் 'குண்டாசில்' கைது

ஓராண்டில் 45 பேர் 'குண்டாசில்' கைது


ADDED : ஜன 11, 2024 09:54 PM

Google News

ADDED : ஜன 11, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்பனை, அரிசி கடத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதைத்தடுக்க, குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்வதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்திலும் ஓராண்டு சிறையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகள் அதிகளவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர்.

அதன்படி, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களும், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களும், ரவுடி படப்பை குணா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில், கடந்தாண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us