sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோடையில் 52 சதவீதம் மழை பொழிவு அதிகம்

/

கோடையில் 52 சதவீதம் மழை பொழிவு அதிகம்

கோடையில் 52 சதவீதம் மழை பொழிவு அதிகம்

கோடையில் 52 சதவீதம் மழை பொழிவு அதிகம்


ADDED : மே 29, 2025 07:42 PM

Google News

ADDED : மே 29, 2025 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் கனமழை பெய்வது வழக்கம். மாவட்டத்திற்கு தேவையான மழை, இந்த இரு மாதங்களிலேயே அதிகளவு பெய்யும்.

கோடை, குளிர் காலங்களில் குறைவான அளவு மழை பெய்யும் என்பதால், இந்த காலங்களில் ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரை நம்பி விவசாயிகள், பாசனம் செய்கின்றனர். ஆனால், இந்தாண்டு கோடை காலத்திலேயே அதிக மழை பொழிந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் எடுத்த கணக்கெடுப்பின்படி, மார்ச் மாதம் முதல், மே மாதம் 28ம் தேதி வரையிலான மூன்று மாத கணக்கெடுப்பின்படி, 6.8 செ.மீ., மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 52 சதவீதம் கூடுதலாக பொழிந்து, 10.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

கோடையில் பரவலாக பல நாட்கள் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் பல நாட்கள் குறைவாக காணப்பட்டன.






      Dinamalar
      Follow us