sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை

/

நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை

நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை

நீச்சலில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி உலக சாதனை


ADDED : அக் 03, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 03, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த உலக சாதனை நிகழ்வில், மனவளர்ச்சி குன்றிய ஆறு வயது சிறுமி உலக சாதனை படைத்துள்ளார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை சார்பில் நோபல், உலக சாதனைக்கான நிகழ்வு அந்த பல்கலையின் பாரிவேந்தர் நீர் விளையாட்டு வளாக நீச்சல் குளத்தில் நடந்தது.

இதில், அனைவரையும் பிரமிக்கவைக்கும் வகையில், மனவளர்ச்சி குன்றிய 6 வயது சிறுமி தரணி சாதனை படைத்து, 'நோபல்' உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இவர் நீர் விளையாட்டில் ஒன்றான 'போட் ஜம்ப்' பிரிவில், 10 மீட்டர் உயரத்தில் இருந்து துணிச்சலாக குதித்த முதல் சிறுமி என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இது குறித்து தரணியின் பயிற்சியாளர் வீரன் கூறுகையில், ''சிறு வயதில் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது, சாதாரண விஷயம் இல்லை. கடுமையான பயிற்சியும் மன உறுதியும் அதிகம் வேண்டும். அது, தரணியிடம் அதிகமாகவே உள்ளது.

தரணியின் பெற்றோர் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநர் மோகன கிருஷ்ணன், இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்தனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us