/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
7ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்
/
7ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்
ADDED : பிப் 04, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, : ஆவடி அடுத்த பாலவேடு காலனியைச் சேர்ந்தவர் அமர்நாத். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவரது மகன் ஹரிகரன், 12. இவர், பாலவேடு அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 1ம் தேதி, ஹரிகரனுக்கு பள்ளியில் இருக்கும்போது வலிப்பு ஏற்பட்டது. ஆவடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது கண்களை தானமளிக்க பெற்றோர் முன் வந்தனர்.
இன்று காலை 11:00 மணி அளவில், மாணவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.