/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாங்காடில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு
/
மாங்காடில் பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு
ADDED : நவ 23, 2024 07:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே மாங்காடு, காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் துரைவேலு, 64. இவரது மனைவி பரிமளம்,57.
இருவரும் குன்றத்துாரில் இருந்து மாங்காடிற்கு ஸ்கூட்டரில் திரும்பினர். மாங்காடு பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பரிமளத்தின் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரண் தாலி செயினை பறித்து, தப்பினார்.
புகாரின் அடிப்படையில் மாங்காடு போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.