/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
/
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
பிரதான குழாயில் உடைப்பு ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்
ADDED : டிச 24, 2024 12:38 AM

காஞ்சிபுரம், டகாஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில்புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு சாலையில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதமாக வழிந்தோடும் குடிநீர், அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாய்க்கு செல்கிறது.
இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதோடு, தொடர்ந்து வெளியேறும் குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வருகிறது.
இதனால், இரவு நேரத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, ஜவஹர்லால் நேரு சாலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.