sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பிரதான குழாயில் உடைப்பு வீணாக வழிந்தோடும் குடிநீர்

/

பிரதான குழாயில் உடைப்பு வீணாக வழிந்தோடும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு வீணாக வழிந்தோடும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு வீணாக வழிந்தோடும் குடிநீர்


ADDED : பிப் 13, 2024 10:10 PM

Google News

ADDED : பிப் 13, 2024 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி, ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் நுழைவாயில் வளைவு அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.

இதனால், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றனர்.

ஆனால், யாரும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக செல்வதை கண்டுகொள்வதில்லை.

எனவே, செங்கழுநீரோடை வீதியில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us