sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 நேருக்கு நேர் மோதிய 'பைக்'குகள்: கொத்தனார் பலி; வாலிபர் காயம்

/

 நேருக்கு நேர் மோதிய 'பைக்'குகள்: கொத்தனார் பலி; வாலிபர் காயம்

 நேருக்கு நேர் மோதிய 'பைக்'குகள்: கொத்தனார் பலி; வாலிபர் காயம்

 நேருக்கு நேர் மோதிய 'பைக்'குகள்: கொத்தனார் பலி; வாலிபர் காயம்


ADDED : நவ 17, 2025 08:22 AM

Google News

ADDED : நவ 17, 2025 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துாரில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கொத்தனார் உயிரிழந்தார்; மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

குன்றத்துார் அருகே சோமங்கலம், லங்காபுரியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 54; கொத்தனார். இவர், நேற்று 'ஹீரோ ஸ்பிளெண்டர்' பைக்கில், குன்றத்துார் - சோமங்கலம் சாலையில் சோமங்கலம் நோக்கி சென்றார்.

அதேவேளையில், ஸ்ரீபெரும்புதுார், மகாணியம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஏழுமலை, 30, என்பவர், சோமங்கலத்தில் இருந்து குன்றத்துார் நோக்கி 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

இரு பைக்குகளும், பூந்தண்டலம் அருகே சக்தி நகர் முந்திரி காட்டுப் பகுதியில் உள்ள சாலை வளைவை கடந்து சென்றபோது, நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த பாலமுருகன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

பலத்த காயமடைந்த ஏழுமலை, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற் று வருகிறார். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us