sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரத்துாரில் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

/

ஒரத்துாரில் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

ஒரத்துாரில் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி

ஒரத்துாரில் காட்சி பொருளான கால்நடை குடிநீர் தொட்டி


ADDED : ஏப் 30, 2025 12:20 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், கோடை காலங்களில் மேய்சலுக்கு செல்லும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமல் அலைகின்றன. இதனால், கால்நடைகள் தண்ணீர் தேடி அலையாத வகையில், ஊராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, தினமும் கால்நடைகளுக்கு தேவையாக தண்ணீரை தொட்டியில் நிரப்ப வேண்டும். அந்த வகையில், குன்றத்துார் ஒன்றியம், ஒரத்துார் ஊராட்சியில், 2018 ம் ஆண்டு, கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.

குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஆரம்ப காலங்களில, தொட்டி தண்ணீர் நிரப்பப்பட்டு, கால்நடைகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டன. ஆனால் இரண்டு வருடங்களாக, கால்நடை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், கால்நடைகள் தண்ணீரின்றி அலைகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், கால்நடை தண்ணீர் தொட்டியில், தண்ணீரை நிரப்பி பராமரிக்க வேண்டும் என, விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us