/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி
/
மீன் பிடிக்க சென்றவர் ஏரியில் மூழ்கி பலி
ADDED : நவ 21, 2025 01:27 AM
படப்பை: படப்பை அடுத்த ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் சங்கர், 50. கூலி தொழிலாளி. நேற்று, அதே பகுதியை சேர்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோருடன், ஆதனுார் அடுத்த மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள குத்தனுார் ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.
சங்கர் ஏரி நீரில் இறங்கி வலை வீசிய போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார். இதைப்பார்த்த ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரும், சங்கரை காப்பாற்ற சென்று, ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கினர்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற படப்பை தீயணைப்பு வீரர்கள், ரப்பர் படகில் சென்று ரஜினி, மாரிமுத்து ஆகிய இருவரையும் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.
பின், சுமார் இரண்டு மணி நேரம் தேடி, சங்கர் உடலை மீட்டனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

