/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தகம் வாசிப்பது அவசியம் கலெக்டர்
/
புத்தகம் வாசிப்பது அவசியம் கலெக்டர்
ADDED : பிப் 17, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த ஓடந்தாங்கல் கிராமத்தில், சமூக பாதுகாப்பு துறையின் கீழ், குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு, கலெக்டர் கலைச்செல்வி நேற்று ஆய்வு செய்தார். உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம், சத்தான காய்கறிகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.