sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அந்தரத்தில் கிழிந்து தொங்கும் சாலையோர விளம்பர பேனர்

/

அந்தரத்தில் கிழிந்து தொங்கும் சாலையோர விளம்பர பேனர்

அந்தரத்தில் கிழிந்து தொங்கும் சாலையோர விளம்பர பேனர்

அந்தரத்தில் கிழிந்து தொங்கும் சாலையோர விளம்பர பேனர்


ADDED : ஜன 17, 2025 01:54 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் ----- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலைகள் அதிகரிப்பால், இந்த சாலையில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வண்டலுார் --- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ளஇடங்களிலும் விளம்பர பேனர்கள் முளைத்துள்ளன.

இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள், சாலையில் விழுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், ஒரகடம் அருகே காரணித்தாங்கலில் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சதுடன் அப்பகுதியை கடக்கின்றனர்.

காற்றில் கிழிந்து தொங்கும் பேனர், சாலையோரம் உள்ள மின் ஒயர் மீதும் உரசுகிறது. இதனால், பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையோரம்கிழிந்து தொங்கும் பேனரை அகற்றுவதுடன், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us