/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடின்றி குடிநீர் தொட்டி வீண்
/
பயன்பாடின்றி குடிநீர் தொட்டி வீண்
ADDED : டிச 05, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழம்பி,
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சி, அமராவதி பட்டினம் பழைய நுாலகம் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிறுமின்விசை ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டது.
இப்பகுதியினர் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். ஓராண்டிற்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்தது.
இதனால், கூடுதல் தண்ணீர் தேவைக்கும், மின்மோட்டார் பழுது, பிரதான குழாய் உடைப்பு ஏற்பட்டு, குழாயில் தண்ணீர் வராத நாட்களில், இப்பகுதிவாசிகள் வேறு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.