/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளியாத்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
/
புளியாத்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
ADDED : செப் 11, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரை:காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில் பிடாரி புளியாத்தம்மன் கோவிலில், ஆவணி திருவிழா விமரிசையாக நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 7ம் தேதி காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, 8ம் தேதி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காலை 11:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
மதியம், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர் அலங்காரத்தில் பிடாரி புளியாத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.