/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே மீடியனில் தொடரும் விபத்துகள் சாலை விரிவாக்கப் பணியில் சுணக்கம்
/
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே மீடியனில் தொடரும் விபத்துகள் சாலை விரிவாக்கப் பணியில் சுணக்கம்
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே மீடியனில் தொடரும் விபத்துகள் சாலை விரிவாக்கப் பணியில் சுணக்கம்
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே மீடியனில் தொடரும் விபத்துகள் சாலை விரிவாக்கப் பணியில் சுணக்கம்
ADDED : நவ 27, 2024 10:59 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் - கீழச்சேரி சாலையில், தனியாருக்கு சொந்தமான நிலம் கையப்படுத்தப்படாமல் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதில் இருந்து, சுங்குவார்சத்திரம் வழியாக, 18 கி.மீ., கீழச்சேரி வரை, இருவழிச் சாலை இருந்தது. இந்த சாலையில், கனரக வாகனங்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால், விபத்து மற்றும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இந்த வழி தடத்தை, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று, மத்திய சாலைகள் நிதி திட்டத்தின்கீழ், 121.65 கோடி ரூபாய் செலவில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த சாலையில், கட்டவாக்கம் - பூதேரி, சிறுமாங்காடு, தென்னேரி ஆகிய மூன்று இடங்களில், ஒன்றரை ஆண்டாக தனியார் நிலம் கையகப்படுத்தப்படாமல் இருப்பதால், இருவழிச் சாலையில் இருந்து, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நிறைவு பெறவில்லை.
நிறைவு பெறாத சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், வாகனங்கள், மீடியன், உயிர் சேதம் ஏற்படுகின்றன.
உதாரணமாக, கடந்த ஆண்டு குறுகிய சாலை மீடியனில், மூன்று முறை டிப்பர் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. மேலும், சிறுமாங்காடு அருகே, வாகன விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.
மூன்று தினங்களுக்கு முன் இரவில், விரிவுபடுத்தப்படாத சாலையில், தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில், உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.
எனவே, வாலாஜாபாத் - கீழச்சேரி வரையில், அரைகுறையாக விடப்பட்ட சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத் - கீழச்சேரி இடையே, தனி நபருக்கு சொந்தமான நிலத்தில், சாலை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்தம் எடுத்தவர் இரு இடங்களில் சாலை விரிவுபடுத்தவில்லை.
இதுபோன்ற இடங்களில், தனி நபர்களின் நிலங்களை கையகப்படுத்த நில எடுப்பு அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம்.
நிலம் எடுத்து முடித்த பின், சாலை விரிவுபடுத்தும் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.