sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

/

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்


ADDED : ஜூன் 01, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்துரமேரூர், உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் நடக்க உள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ளது.

அதில், நாளை, சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளி மாணவர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள், விதவை மற்றும் விளையாட்டு மாணவர்கள் ஆகியோருக்கும் நடக்க உள்ளது.

அதை தொடர்ந்து, 5ம் தேதி, கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல் பிரிவு மாணவர்களுக்கும், 6ம் தேதி வணிகவியல், பொருளியல் மாணவர்களுக்கும், 9ம் தேதி தமிழ், ஆங்கிலம் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவாய் மற்றும் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போர்ட் புகைப்படத்துடன் மாணவர்கள் பெற்றோரை அழைத்து வர வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்கள் www.gascuthiramerur.ac.in என்ற இணையதளம் வாயிலாக அறியலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us