sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அ.தி.மு.க., பிரமுகர் மகன் காஞ்சியில் வெட்டி கொலை

/

அ.தி.மு.க., பிரமுகர் மகன் காஞ்சியில் வெட்டி கொலை

அ.தி.மு.க., பிரமுகர் மகன் காஞ்சியில் வெட்டி கொலை

அ.தி.மு.க., பிரமுகர் மகன் காஞ்சியில் வெட்டி கொலை


ADDED : ஜன 09, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜேக்கப்; அ.தி.மு.க.,வில் கிளை செயலராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள்.

இதில், மூத்த மகனான ஆனந்த், 31. பட்டப்படிப்பு முடித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன உரிமம், எப்.சி., புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகளை 'கமிஷன்' அடிப்படையில் செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆனந்துக்கு, மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின், நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே துரித உணவகத்தின் முன், ஆனந்த் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மது அருந்தியதற்கான தடயங்கள் இருந்ததால், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us