/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தப்பிய குரங்கு ஒன்று பிடிபட்டது
/
தப்பிய குரங்கு ஒன்று பிடிபட்டது
ADDED : பிப் 17, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், வண்டலுார் பூங்காவில் தப்பிய இரண்டு அனுமன் குரங்குகளில் ஒன்று, நேற்று பிடிக்கப்பட்டது.
வண்டலுார் பூங்காவில் இருந்து, இரண்டு அனுமன் குரங்குகள், தப்பிச்சென்றன. அவற்றை தேடி பிடிக்கும் பணி, தீவிரமாக நடந்து வந்தது. இரண்டு குரங்குகளும், ஓட்டேரியில் சுற்றித்திரிந்தன.
இது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம், மயக்க ஊசி செலுத்தி, பெண் குரங்கை, பூங்கா ஊழியர்கள் பிடித்தனர். மற்றொரு குரங்கான ஆண் குரங்கை தேடி வருகின்றனர்.