/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா
/
அம்மன் கோவில்களில் ஆனி திருவிழா
ADDED : ஜூலை 02, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பள்ளூர் ஊராட்சியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆனித்திருவிழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் ஊராட்சியில், மதுரா ஆலப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு, ஆனித்திருவிழா நடந்தது.
இந்த திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு பொன்னியம்மன், முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பகல், 11:00 மணிக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.