/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்
/
விமான நிலைய நில எடுப்பு டி.ஆர்.ஓ., நியமனம்
ADDED : பிப் 17, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், தமிழகத்தில், 35 துணை ஆட்சியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு துணை ஆட்சியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு துணை ஆட்சியர் பேபி இந்திரா, பரந்துார் விமான நிலையம் நில எடுப்பு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் துணை ஆட்சியர் ரவி, தர்மபுரி சர்க்கரை ஆலைக்கு, மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.