ADDED : நவ 12, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் வாயிலாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, கோவில் செயல் அலுவலர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி ஆளவந்தார் அறங்கட்டளைக்கு செயல் அலுவலராக செல்வகுமார் மற்றும் காஞ்சிபுரம் குமரக்கோட்ட சுப்ரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலராக கேசவன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொறுப்பு கோவில் செயலர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். புதிய செயல் அலுவலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.