/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வணிக வரித்துறைஉதவிகமிஷனர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
/
வணிக வரித்துறைஉதவிகமிஷனர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
வணிக வரித்துறைஉதவிகமிஷனர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
வணிக வரித்துறைஉதவிகமிஷனர் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : டிச 07, 2024 01:07 AM

சென்னை, செங்கல்பட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்மாயமான நிலையில், போரூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
போரூர், அம்பாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில்வேல், 53; செங்கல்பட்டு வணிக வரித்துறையில் உதவி கமிஷனராக பணி யாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, ராமகிருஷ்ணா நகர் பூங்காவில், நடை பயிற்சி செல்வதற்காகஇருசக்கர வாகனத்தில் சென்றார்.
காலை 7:30 மணி ஆகியும் வீடு திரும்பாததால்,அவரது மனைவி கோமளா, 42, மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால், அவரது மொபைல் போன், வீட்டி லேயே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், நடைபயிற்சி செய்யும் பூங்காஉட்பட பல்வேறு இடங்களில் தேடியும் செந்தில்வேல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு எஸ்.ஆர்.எம்.சி., காவல் நிலையத்தில், மனைவி புகார்அளித்தார்.
புகாரில், 'கோவூர்,மூன்றாம் கட்டளையில்கட்டிய வீட்டை, எட்டு மாதங்களுக்கு முன் என் கணவர் விலைக்கு வாங்கினார். வீடு வாங்குவதற்காக தனியார் வங்கியிலும், தெரிந்தவர்களிடமும் கடன் பெற்றுள்ளார்.
'ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக என்னிடமும், பிள்ளை களிடமும் கூறி வந்தார். இந்நிலையில்அவர் மாயமாகி உள்ளார்' என குறிப்பிட் பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந் நிலையில், போரூர் ஏரியில்ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று காலை தகவல்வந்தது.
உடலை மீட்டபோது, மாயமான வணிகவரித்துறை உதவி கமிஷனர்செந்தில்வேல் என்பது, போலீசாருக்கு தெரியவந்தது.
பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, போலீசார் அனுப்பினர்.
கடன் அல்லதுபணியிட பிரச்னையால் தற்கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசினரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.