sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஆக 17, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 17, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கைத்தண்டலம் கிராமத்தில் உள்ள எழில்சோலை விவசாய பண்ணையில், தமிழ்நாடு வேளாண் தொழில்நுட்ப முகமை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, மரம் வளர்ப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மாசிலாமணி பேசியதாவது:

கோடை காலங்களில் மரக்கன்றுகளை நடாமல், மழைக்காலத்தில் நட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் மரங்களை நடக்கூடாது.

வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் ஆகிய நிழல் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். மரங்களை வளர்ப்பதால் பறவைகளுக்கு இருப்பிடம் கிடைக்கிறது. மரங்களை அதிகமாக வளர்ப்பதால் பூச்சித் தாக்குதலில் இருந்து, விவசாய பயிர்களை காக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்; சுற்றுச்சூழலை பாதுகாத்து நிலத்தடி நீரை சேமிக்க, மரம் வளர்ப்போம்' என, பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us