/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
/
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 19, 2024 11:36 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் இதர பணிகளுக்காக வந்தவர்களுக்கு வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், விபத்தில்லாமல் வாகனங்களை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டும்போது தலைகவசம் அணிவதன் அவசியம், நான்குசக்கர வாகனங்களை ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலையில் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்காமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகள் ஆகியவை குறித்து ப்ரஜக்டர் வாயிலாக விழிப்புணர்வு நடத்தினார். தொடர்ந்து இரண்டு மணிநேரம் நடந்த இப்பயிற்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் வட்டார அலுவலகத்திற்கு ஓட்டுநர் உரிமத்திற்காக வந்தவர்களுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.