sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாதுகாப்பான பேருந்து இயக்கம் காஞ்சியில் விழிப்புணர்வு கூட்டம்

/

 பாதுகாப்பான பேருந்து இயக்கம் காஞ்சியில் விழிப்புணர்வு கூட்டம்

 பாதுகாப்பான பேருந்து இயக்கம் காஞ்சியில் விழிப்புணர்வு கூட்டம்

 பாதுகாப்பான பேருந்து இயக்கம் காஞ்சியில் விழிப்புணர்வு கூட்டம்


ADDED : டிச 18, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 18, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்தில், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

தமி ழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில், வரும் 31ம் தேதி வரை பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து கோட்டத்தில் உள்ள அனைத்து டிரைவர்களுக்கும், கண்டக்டர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காஞ்சிபுரம் மண்ட ல அலுவலகத்தில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கான பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், அனைத்து டிரைவர், கண்டக்டர்களுக்கும் விபத்து இல்லாமல், பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அனைவருக்கும், பேட்ஜ் அணிந்து புரியும் வகையில், 'பாதுகாப்பான பே ருந்து இயக்கம்' என்ற விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்ட பேட்ஜ் வழங்கப்பட்டது.

இதில், வணிகம் பிரிவு துணை மேலாளர் ஸ்ரீதர், தொழில்நுட்ப உதவி மேலாளர் தட்சணாமூர்த்தி, உதவி மேலாளர் இயக்கம் இளம்பரிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சி பேருந்து நிலையம்: கா ஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நடந்த பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேட்ஜ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கும் பேட்ஜ் வழங்கப்பட்டது.

இதில், காஞ்சி புரம் பணிமனை கிளை மேலாளர் சீனிவாசன், ஓரிக்கை பிரிவு 1 மேலாளர் ராஜசேகர், ஓரிக்கை பிரிவு 2 மேலாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் பேருந்து நிலைய உதவி பொறியாளர் இளங்கோவன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.






      Dinamalar
      Follow us