/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழவேரியில் ரூ.56 லட்சத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை
/
பழவேரியில் ரூ.56 லட்சத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை
பழவேரியில் ரூ.56 லட்சத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை
பழவேரியில் ரூ.56 லட்சத்தில் சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 03, 2025 07:28 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சமுதாய கூடம் இல்லாததால், அப்பகுதிவாசிகள் காதணி விழா, திருமணம், நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த, வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
எனவே, இங்கு சமுதாய கூடம் அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2025 --- 26 நிதி ஆண்டில், கனிமவள நிதியின் கீழ், 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
பழவேரி ஊராட்சி தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, சமுதாய கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தார். இதில், ஊராட்சி துணைத் தலைவர் பிரபாகரன், ஒன்றிய தி.மு.க., செயலர் குமார், ஊராட்சி செயலர் உமாபதி உட்பட பலர் பங்கேற்றனர்.