/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ - மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் விழா
/
மாணவ - மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் விழா
ADDED : டிச 24, 2025 06:37 AM
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமை வகித்தார். உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி; வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி; வா.தி.வா. மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி என, மூன்று பள்ளிகளிலும், 509 மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்களை நேற்று முன்தினம் வழங்கினார்.
அதை தொடர்ந்து, கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சி தலைவர் அலுவலக கட்டடம் மற்றும் நாயக்கன்பேட்டை ரேஷன் கடை கட்டடம் ஆகியவற்றை எம்.எல்.ஏ., -சுந்தர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார், வாலாஜாபாத் ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன், துணை சேர்மன் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

