ADDED : ஜூலை 25, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, நெமிலி ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் உடல் மிதப்பதாக, நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் ஏரியில் தானாக தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசி சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.