ADDED : டிச 12, 2025 05:40 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: கும்பகோணம் திப்பிராஜ புரம் சிவக்கன்று கருணா அமுதசுவாமி எழுதிய 'திருவைகுந்த காளத்தியப்பர் பிரபந்த மாலை' என்ற நுால் வெளியீட்டு விழா, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது.
காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை நிடுமாமிமடம் மடாதிபதி சிவப்பிரகாச வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் நுாலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்.
திருமேற்றளீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். புலவர் சரவணசதாசிவம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வச்சிரவேலு ஆகியோர் நுால் அறிமுகம் செய்தனர்.
கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார் தமிழ்செல்வன் கடவுள் வாழ்த்து பாடினார்.
