sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மது போதையில் தகராறு சிறுவன் அடித்து கொலை?

/

மது போதையில் தகராறு சிறுவன் அடித்து கொலை?

மது போதையில் தகராறு சிறுவன் அடித்து கொலை?

மது போதையில் தகராறு சிறுவன் அடித்து கொலை?


ADDED : ஆக 04, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்,மதுபோதை தகராறில், நண்பர்களால் சிறுவன் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

செங்குன்றம் அடுத்த தர்காஸ் பகுதியில் உள்ள மரத்தில், சிறுவன் உடல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதாக, செங்குன்றம் போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 17, என்பது தெரியவந்தது. இவர், பணப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

செங்குன்றம், மல்லிமாநகர் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் நடந்த மது விருந்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஷ் பங்கேற்றுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காயங்களுடன் இருந்த ராஜேஷின் உடையில் ரத்தக்கறைகளும் இருந்துள்ளன.

மதுபோதை தகராறில், சிறுவன் அடித்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us