/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை தொட்டி குழாய் உடைப்பு மேல்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்
/
கால்நடை தொட்டி குழாய் உடைப்பு மேல்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்
கால்நடை தொட்டி குழாய் உடைப்பு மேல்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்
கால்நடை தொட்டி குழாய் உடைப்பு மேல்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 28, 2025 01:08 AM

மேல்கதிர்பூர்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர் ஊராட்சி, மேட்டுகுப்பம் செல்லும் சாலையோரம், 2018 - 19ல் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர் குழாய் இணைப்புடன் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேய்ச்சலுக்காக வரும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிநீர் தொட்டியில் நிரப்பப்படும் குடிநீரை பருகி வந்தன.
இந்நிலையில், தொட்டியில் குடிநீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்ட குழாய் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், கால்நடை தொட்டியில் குடிநீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளதோடு, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து, கால்நடை தொட்டியில் குடிநீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தியு உள்ளனர்.