sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்

/

குடிநீர் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்

குடிநீர் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் வீணாகும் குடிநீர்


ADDED : நவ 03, 2025 11:06 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்கதிர்பூர்: திருப்பாற்கடல் பாலாறில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நிலத்தடி வழியாக செல்லும் மெயின் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 1060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காஞ்சிபுரம் பாலாறு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பாற்கடலில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நிலத்தடி வழியாக செல்லும் மெயின் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு தேவையான குடிநீர் முழுமையாக செல்லாத நிலை உள்ளது. இதனால், நீண்டநேரம் இயங்கும் மின்மோட்டாரும் விரைவில் பழுதடையும் சூழல் உள்ளதோடு, மின்சாரமும் விரயமாவதால் மின்வாரியத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

தொடர்ந்து வெளியேறும் குடிநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு கீழ்கதிர்பூரில் சாலையும் சேதமாகிறது. எனவே, கீழ்கதிர்பூரில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us