sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர் வருகை

/

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர் வருகை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர் வருகை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி நீர் வருகை


ADDED : ஜன 29, 2024 04:00 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வினாடிக்கு 130 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திற்கு வருவதால் ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயருகிறது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி.,யும், நீர் மட்டம் 24 அடி உயரமும் கொண்டது. வட கிழக்கு பருவமழையால் ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரியில் 21 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.

இந்நிலையில், ஆந்திரா, தமிழகம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து, பூண்டி ஏரிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இதனால், பூண்டி ஏரியின் நீர் மட்டத்தை குறைக்க, பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 26ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் இருங்காட்டுக்கோட்டை அருகே மேவளூர்குப்பம், தண்டலம் வழியாக சென்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 130 கன அடி நீர் செல்கிறது.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3.045 டி.எம்.சி.,யும், நீர் மட்டம் உயரம் 21.72 அடியாக உள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்கு 109 கன அடியும், சிப்காட் குடிநீர் தேவைக்கு 3 கன அடியும், விவசாய நீர் பாசனத்திற்கு 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பறவைகள் கணக்கெடுப்பு


தமிழக வனத்துறை சார்பில், ஆண்டிற்கு இருமுறை ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், ஜனவரியில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பும், மார்ச் மாதம் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், நீர்ப்பறவைகள் கணக்கெடுக்கும் பணி, இரு தினங்களாக நடக்கிறது. ஸ்ரீபெரும்புதுார் வனத்துறை சார்பில், வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையில், கல்லுாரி மாணவர்கள், தனியார் அமைப்பினர் உள்ளிட்ட 30 பேர் இணைந்து இரண்டு நாள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி, அமரம்பேடு ஏரி, மணிமங்கலம் ஏரி, மண்ணுார் ஏரி, ஸ்ரீபெரும்புதுார் ஏரிகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன.

இதில், நாமக்கோழி, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, உள்ளான், கொக்கு, சாம்பல் நாரை, மீன் கொத்தி உள்ளிட்ட 28 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us