/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் கம்பி உரசியதில் கேபிள் டிவி ஆப்ரேட்டர் பலி
/
மின் கம்பி உரசியதில் கேபிள் டிவி ஆப்ரேட்டர் பலி
ADDED : டிச 01, 2024 08:25 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 49; கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவர், நேற்று, காலை 10:00 மணி அளவில், ஓரிக்கை விவேகானந்தன் நகர் பகுதி மின் கம்பத்தில் செல்லும் கேபிள் டிவி ஓயர் பழுது நீக்கிக் கொண்டிருந்தார். அப்போது, கேபிள் டிவி ஒயர் மீது சென்றுக் கொண்டிருந்த, 15 கிலோ வாட் மின் கம்பி உரசியதில், அவர் கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டார் என, தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.