/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
/
நவ.,15 க்குள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : செப் 27, 2024 07:42 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024- - 25ம் ஆண்டிற்கான சம்பா என்கிற ரபி பருவ விதைப்பு காலம் ஆகஸ்ட் முதல், நவம்பர் மாதம் வரை என, அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்பருவத்தில் பயிரிடும் விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், 1 ஏக்கருக்கு 518 ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
மேலும். பதிவு செய்யும்போது நிலத்தின் அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ- - சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து, அவை சரியாக உள்ளதா என்று சரி பார்த்து ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.