sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்

/

128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்

128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்

128 ரயில் நிலையங்களில் ஜூலைக்குள் கேமரா நிறுவப்படும்


ADDED : ஜன 31, 2024 10:35 PM

Google News

ADDED : ஜன 31, 2024 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சென்னை ரயில் கோட்டத்தில், 128 ரயில் நிலையங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணிகள் வரும் ஜூலைக்குள் முடியும்,'' என, சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர்கூறியதாவது:

சென்னை ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட நிலையங்களை, தினமும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிதி ஆண்டில் இதுவரை, 3,236.56 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது, 4.7 சதவீதம் அதிகமாகும்.

வந்தே பாரத் ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 63.08 கோடி ரூபாய் மதிப்பில், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அவசரமருத்துவ உதவி மையம், பேட்டரி வாகன வசதி, லிப்ட், எஸ்கலேட்டர்கள், நடைமேம்பாலங்கள், உணவகம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல், ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 128 ரயில் நிலையங்களிலும் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் வரும் ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us