/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கடை பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
/
ரேஷன் கடை பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : நவ 26, 2024 03:54 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், சில கூட்டுறவு சங்கங்களில், 35 ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் 16 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலி பணியிடங்களுக்கு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதவிக்கு, 3,797 பேர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, 995 பேர்கள் என மொத்தம், 4,792 பேர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 112 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 4,680 பேர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க, 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், நேற்று, நேர்காணல் நடந்தன. இதில், படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்களின் அசல் சான்றுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நேர்காணல், டிச.,5ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினசரி, 500 பேர்கள் பங்கேற்க உள்ளனர் என, கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.