/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்
/
அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்
ADDED : ஏப் 17, 2025 09:59 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் புஷ்பவல்லி தாயார் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சப்பரத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜ பெருமாள் வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது.
இரண்டாம் நாள் உத்சவமான, 14ம் காலை, ஹம்ச வாகனத்திலும், மாலை சூரிய பிரபையிலும், மூன்றாம் நாள் உத்சவமான 15ம் தேதி, காலை கருடசேவை உத்சவமும், மாலை ஹனுமந்த வாகன உத்சவமும் விமரிசையசாக நடந்தது.
நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை, சேஷ வாகனத்திலும், மாலை சந்திர பிரபையிலும், ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்திலும், மாலை யாளி வாகனத்திலும் சுவாமி உலா வந்தார்.
ஆறாம் நாள் உத்சவமான இன்று, காலை வேணுகோபாலன் திருக்கோலத்திலும், மாலை யானை வாகனத்திலும் அஷ்டபுஜ பெருமாள் உலா வருகிறார்.
இதில், ஏழாம் நாள் பிரபல உத்சவமான நாளை காலை தேரோட்டம் நடக்கிறது, இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் பெருமாள், முக்கிய வீதி வழியாக பவனி வருகிறார். மாலையில் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்காலர்கள் இளங்கோவன், தேவிகா, கோவில் அர்ச்சகர்கள், அர்ச்சகர்கள் முரளிபட்டர் கமலகண்ணன், உபயதாரர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.