/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சித்தாலப்பாக்கம் பாசன கால்வாய் துார் வார விவசாயிகள் கோரிக்கை
/
சித்தாலப்பாக்கம் பாசன கால்வாய் துார் வார விவசாயிகள் கோரிக்கை
சித்தாலப்பாக்கம் பாசன கால்வாய் துார் வார விவசாயிகள் கோரிக்கை
சித்தாலப்பாக்கம் பாசன கால்வாய் துார் வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 03, 2024 01:21 AM

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், சித்தாலப்பாக்கத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரி, மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால் அப்பகுதியில் உள்ள 230 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
சித்தாலப்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக தண்ணீர் வெளியேறி, அப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த ஆண்டுகளில் துார்வாராமல் மேடாக துார்ந்துள்ளது.
இதனால், சாகுபடி காலங்களில் கடைக்கோடியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுகிறது. அச்சமயங்களில், இறுதிக்கட்ட பாசனத்திற்கு தண்ணீர் செல்லாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சித்தாலப்பாக்கம் ஏரியில் இருந்து, மதகு வழியாக தண்ணீர் வெளியேறும் பாசன கால்வாயை துார்வாரி சீர் செய்ய, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.