/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடையாள அட்டை எண் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
/
அடையாள அட்டை எண் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
அடையாள அட்டை எண் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
அடையாள அட்டை எண் பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை
ADDED : டிச 26, 2025 05:59 AM
காஞ்சிபுரம்: விவசாயிகள், அரசு திட்டங்களில் பயன்பெற, தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் என்பது, இனி வருங்காலத்தில் அத்தியாவசியமான ஒன்று. மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால், விவசாய அடையாள எண் கண்டிப்பாக தேவை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் ஊக்கத்தொகை பெறவும், பயிர் காப்பீட்டுத்தொகை பெறவும் கண்டிப்பாக விவசாய அடையாள அட்டை எண் தேவை.
எனவே, விவசாய அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்களுக்கு அருகாமையில் உள்ள கணினி சேவை மையம் அல்லது வட்டார வேளாண் அலுவலகங்கள் சென்று, தங்கள் ஆதார், பட்டா விபரங்களுடன், வரும் 31ம் தேதிக்குள் விவசாய அடையாள எண் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

