sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கல்லுாரி கிரிக்கெட்: விவேகானந்தா சாம்பியன்

/

கல்லுாரி கிரிக்கெட்: விவேகானந்தா சாம்பியன்

கல்லுாரி கிரிக்கெட்: விவேகானந்தா சாம்பியன்

கல்லுாரி கிரிக்கெட்: விவேகானந்தா சாம்பியன்


ADDED : பிப் 15, 2024 10:23 PM

Google News

ADDED : பிப் 15, 2024 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, சென்னையில் நடந்து வந்தது. 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

அனைத்து போட்டிகளின் முடிவில், குருநானக் மற்றும் ஆர்.வி.கே., விவேகானந்தா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

நேற்று, சேப்பாக்கம் எம்.ஏ., சிதம்பரம் மைதானத்தில், 50 ஓவருக்கான இறுதிப்போட்டி நடந்தது. டாஸ் வென்ற விவேகானந்தா அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடியகுருநானக் அணி, 35 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 121 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய விவேகானந்தா அணி, 31 ஓவர்களில், மூன்று விக்கெட் இழந்து, 125 ரன்களை எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

அணியின் வீரர் தியாஷ் 106 பந்துகளில் மூன்று சிக்சர், ஏழு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்களை அடித்து, ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அனைத்து போட்டிகளின் முடிவில், அதிகப்படியான 425 ரன்களை அடித்த குருநானக் வீரர் கணேஷ், சிறந்த வீரருக்கான பட்டத்தை தட்டிச் சென்றார்.






      Dinamalar
      Follow us