sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார் பெட்டி..

/

புகார் பெட்டி..

புகார் பெட்டி..

புகார் பெட்டி..


ADDED : நவ 19, 2024 03:10 AM

Google News

ADDED : நவ 19, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், சந்தவேலுார் ஊராட்சி அலுவலகம், அவசர சிகிச்சை மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நுாலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.

இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் சேதமடைந்து உடைந்து உள்ளது.

இதனால், அவசர சிகிச்சை மையம், பள்ளி, ஊராட்சி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள், சேதமான மழைநீர் கால்வாயில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சு. தர்மராஜ், சந்தவேலுார்.

சிறுபாலம் சீரமைப்பது எப்போது?

உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமம், பிள்ளையார் கோவில் எதிர் தெருவில், சாலையின் குறுக்கே, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன், இப்பாலம் வழியாக கனரக வாகனம் சென்றபோது, சிறுபாலம் சேதமடைந்து உடைந்தது.

இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சேதமடைந்த சிறுபாலம் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், இவ்வழியாக கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, கடல்மங்கலத்தில் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.குமார், கடல்மங்கலம்.






      Dinamalar
      Follow us