
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குப்பை கொட்டும் இடமான கால்வாய்
உத்திரமேரூர் ஒன்றியம், அத்தியூர் மேல்துாளி ஊராட்சி, அத்தியூர் கிராமத்தில், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் தெருக்களில் தேங்கி வந்தது.
இங்கு, நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க, 2012 -- 22ம் நிதியாண்டில் 15வது நிதிக்குழு திட்டத்தில், 31,000 ரூபாய் செலவில் வடிகால்வாய் கட்டப்பட்டது.
தற்போது, முறையாக பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து, குப்பை கொட்டப்பட்டுள்ளது. மேலும், உடைந்த மரத்தின் கிளைகள் வடிகால்வாயில் போடப்பட்டுள்ளன. இதனால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால்வாயை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

