sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்

/

ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்

ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்

ஊராட்சி அலுவலக கூரையில் கான்கிரீட் பெயர்ந்து வரும் அவலம்


ADDED : ஏப் 04, 2025 12:42 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், மல்லிகாபுரம், படூர், அமராவதிபட்டணம், காட்டாங்குளம், விழுதவாடி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில், காட்டாங்குளம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்தோர் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவைகளை பெற வந்து செல்கின்றனர்.

இந்த ஊராட்சி அலுவலக கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது, ஊராட்சி அலுவலக கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல், கட்டட கூரை சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அலுவலகத்திற்கு வருவோர், அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.

எனவே, பழுதடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us