/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தை பிரிப்பதில் சுணக்கம்
/
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தை பிரிப்பதில் சுணக்கம்
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தை பிரிப்பதில் சுணக்கம்
காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தை பிரிப்பதில் சுணக்கம்
ADDED : ஜன 17, 2024 09:55 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காவல் துறையின் கீழ், அனைத்து மகளிர், மதுவிலக்கு உட்பட 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், காஞ்சி தாலுகா காவல் நிலையத்தின் கீழ், பரந்துார், ஏனாத்துார், காரை, நீர்வள்ளூர், செவிலிமேடு, ஓரிக்கை என 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் வருகின்றன.
இரவு நேர ரோந்து, தேசிய நெடுஞ்சாலை வழிப்பறி போன்றவை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், தாலுகா காவல் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என, காவல் துறையினர் அரசுக்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பியதை தொடர்ந்து, கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின், காவல் துறை மானிய கோரிக்கையின்போது, பொன்னேரிக்கரை காவல் நிலையம், 2.58 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தெரிவித்திருந்தார்.
அவர் அறிவித்து ஒராண்டு ஆகும் நிலையில், பொன்னேரிக்கரை காவல் நிலையம் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளது.
புதிய காவல் நிலையத்துக்கான இடம் ராஜகுளம் அருகே தேர்வு செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.