sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்

/

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணி துவக்கம்


ADDED : மார் 17, 2025 12:44 AM

Google News

ADDED : மார் 17, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் -பொன்னேரிக்கரை, பாலுச்செட்டிசத்திரம் உள்ளிட்ட பிரதான சந்திப்பு கடவுப்பாதைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

விபத்தை தவிர்க்க, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையில் இருந்து, ஆறுவழிச் சாலையாகவும், 18 இடங்கள் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வாயிலாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன.

மதுரவாயல் - -ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., துாரம் 2022ம் ஆண்டு பணிகள் துவங்கி, 2024 மார்ச் மாதத்தில் முடிக்க வேண்டும்.

அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 டிசம்பர் மாதம் முடிக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் 2019ம் ஆண்டு துவங்கி, 2024 அக்டோபர் மாதம் முடிக்க வேண்டும்.

கடந்த 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள் கால அவகாசம் நிறைவுடைந்தும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

குறிப்பாக, ராஜகுளம், ஏனாத்துார், பொன்னேரிக்கரை ஆகிய பகுதிகளில், மேம்பாலம் கட்டுவதற்கு மாற்றுப்பாதை அமைத்துள்ளனர். வாகனங்கள் ஏறி இறங்குவதற்கு ஏற்ப, ஏற்றம் மற்றும் இறக்கத்தில் சாம்பல் கொட்டி சாய் தள வசதி ஏற்படுத்தவில்லை.

பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, டிசம்பர் மாதம் மறு டெண்டர் விடப்பட்டது. பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் மேம்பாலத்தின் இருபுறமும் சாம்பல் துாள் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

விரைவில் பணிகள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணி எடுத்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us