sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேசிய துக்க நாள் அனுசரிப்பு அரசு கட்டடம் திறப்பால் சர்ச்சை

/

தேசிய துக்க நாள் அனுசரிப்பு அரசு கட்டடம் திறப்பால் சர்ச்சை

தேசிய துக்க நாள் அனுசரிப்பு அரசு கட்டடம் திறப்பால் சர்ச்சை

தேசிய துக்க நாள் அனுசரிப்பு அரசு கட்டடம் திறப்பால் சர்ச்சை


ADDED : டிச 29, 2024 01:09 AM

Google News

ADDED : டிச 29, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து, ஒரு வாரம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதேபோல், தமிழக அரசும் ஜன., 1ம் தேதி வரை, துக்க தினமாக அனுசரிக்கப்படும் என, அறிவித்தது.

தேசிய துக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில், நேற்று முன்தினம் அரசு விழா நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் தலைமையில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 42வது வார்டில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

மேலும், விளக்கடி கோவில் தெருவில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை ஆகியவற்றையும் திறந்து வைத்து, இனிப்பு வழங்கினார்.

மாநகராட்சியின் 29வது வார்டில், 19 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய கட்டடங்களை திறந்து வைப்பதும், அடிக்கல் நாட்டுவதும் போன்ற அரசு நிகழ்ச்சிகளால் சர்ச்சை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us